முகப்பு உயிர்மை.காம் உயிர்மை பதிப்பகம் மாத இதழ் உயிரோசை வார தொகுப்பு தொடர்புகளுக்கு சந்தா எங்களைப்பற்றி
மதுரை  புத்தக திருவிழாவில் உயிர்மை பதிப்பகம்: 2010 செப்டம்பர் 2-12, உயிர்மை அரங்கு எண்: 112-113,இடம்: தமுக்கம் மைதானம்-வேலூர் புத்தக கண்காட்சியில் உயிர்மை பதிப்பகம்:2010 ஆகஸ்ட் 28 - செப்டம்பர் 6 ,உயிர்மை அரங்கு எண்: 34, இடம்: கோட்டை மைதானம்

கட்டுரை
எம். எஃப். ஹுசேன்: வெறுப்பின் வேர்கள்
வாஸந்தி
ஏன் எமது சினிமா சாகிறது?
சுதேசமித்திரன்
திருமணம் என்ற பந்தம்
ந. முருகேசபாண்டியன்
போதகனிடம் திருடனின் கேள்வி
சி.வி. பாலகிருஷ்ணன்
மெல்லினமும் வல்லினமும்
அ.ராமசாமி
நிழல் உலகின் நிஜங்கள்
வா. மணிகண்டன்
நாகரிகத்திற்கான பெரும் போர் - ராபர்ட் பிஸ்க் பற்றிய குறிப்புகள்
எச்.பீர்முஹம்மது
மின் வெட்டு: இருளும் உண்மையின் வெளிச்சமும்
சஞ்சித்
அமிதாப் பச்சனும் பானி பூரி விற்பவனும்
மனோஜ்
இலக்கியப் பரிந்துரைகள்
சுகுமாரன்
தி.நகர்: மரணத்தின் வாசலில் ஷாப்பிங்
மாயா
கவிதை
கடவுளும் இன்ன பிற
இலக்குவண்
மழை இரவின் கதை
றஞ்சினி
பாண்டித்துரை கவிதைகள்
பாண்டித்துரை
அறிவுநிதி கவிதைகள்
அறிவுநிதி
உயிரின் கடைசித் துகள்கள்
ந. லக்ஷ்மி சாகம்பரி
நீல நிறக் கனவு
கார்த்திகா
மணிமொழி கவிதைகள்
மணிமொழி
சிறுகதை
சிறுகதை: நித்யாவும் நானும்
கென்
சிறுகதை: நோக்கம்
தமிழ்மகன்
இந்த வார கருத்துப் படம்
ஆஹா! வெற்றி!!
பாபுஜி
சுமைகள்
பாபுஜி
பொது
ஹைக் கூ வரிசை
ஆலன் ஸ்பென்ஸ்
வாய்மொழி வரலாறு: நாட்டார் தரவுகளில் சுதந்திரப் போராட்டச் சுவடுகள்
கழனியூரன்.
அறிவிப்புகள்
நியூ செஞ்சுரியின் உங்கள் நூலகம்-மாத இதழ்
வெளியீட்டு விழா மற்றும் கருத்தரங்கம்
கடித இலக்கியம்
பழமொழிகளும் சொலவடைகளும்
கழனியூரான்
கடிதங்கள்
கங்காணி
திங்களிதழ்
கடித இலக்கியம்
அன்புடன் கல்யாண்ஜி
வண்ணதாசன் தி.க.சிக்கு எழுதியது
சிறுகதை
எங்கே போகிறோம்
புது நூல் அறிமுகம்
நிகழ்வுகள்
"தமிழ் தனித்து இயங்காது"
'தொல்காப்பியம் - பொருளுரை' நூல் வெளியீட்டு விழா
குகனின் நடைபாதையில் கொஞ்ச நேரம்
சிறுகதைத் தொகுப்பு வெளியீடு
உங்கள் கருத்துகள்
உங்கள் கருத்துகள்
uyirosai@uyirmmai.com
பழமொழிகளும் சொலவடைகளும்
கழனியூரான்

41. அடிநாக்கிலே நஞ்சு, நுனி நாக்கிலே அமுதம்.

42. அடிப்பானேன், பிடிப்பானேன்? அடக்குகிற வழியாய் அடக்கப்பார்!

43. அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும்.

44. அடியற்றால் (இத்துப்போனால்) நுனி விழாது இருக்குமா?

45. அடிக்கு (தூர் பகுதிக்கு) உள்ளதுதான் நடுவுக்கும்; நடுவுக்கு உள்ளதுதான் நுனிக்கும்.

46. அடியும் பட்டு புளித்த கூழும் குடிக்கணுமா?

47. அடியே...ன்னு கூப்பிட பெண்டாட்டியே இல்லை. அவன் என்னடாவென்றால், பிள்ளை எத்தனை? என்கிறான்.

48. அடிவானம் கறுத்தால் அப்போதே மழை பெய்யும்.

49. அடுக்குகிற அருமை, உடைக்கிற நாய்க்குத் தெரியுமா?

50. அடுத்த வீட்டு கூரையில் பிடித்த தீ, உன் வீட்டுக்குத் தாவ எத்தனை நாழி(நாழிகை-நேரம்)  ஆகும்?

51. அடுத்தது காட்டும் பளிங்கு(கண்ணாடி).

52. அடுத்த வீட்டுக்காரி ஆம்பளப் புள்ளை பெத்தாள்னு பக்கத்து வீட்டுக்காரி அம்மிக்குழவியை எடுத்து தன் அடி வயிற்றில் குத்திக்கிட்டாளாம்!

53. அடுப்பு அனலில் (வெக்கையில்) வெண்ணையை வைத்த கதை போல.

54. அடுப்புக் கட்டிக்கும் அழகு வேண்டும்.

55. அடுத்த வீட்டுக்காரனுக்கு யோகம் வந்ததால் (பணம் வந்ததால்) அண்டை வீடு குதிரை லாயமாச்சு.

56. அடைமழை விட்டும் செடி மழை(செடியின் இலையில் இருந்து விழும் மழைத்துளிகள்) விடவில்லை.

57. அட்டமத்துச் சனி பிடித்து பிட்டத்து (உடுத்தியிருந்த) துணியையும் பிடுங்கிக் கொண்டது.

58. அட்டமத்துச் சனியை வட்டிக்கு வாங்காதே!

59. அட்டையை (பூச்சி இனத்தைச் சேர்ந்த புழு) பிடித்துக் கட்டிலில் போட்டால் அது அங்கும் கிடக்காது.

60. அணில் ஊணும், ஆமை நடையும் மெல்லத்தான்.

உங்கள் கருத்துக்களை படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி
uyirosai@uyirmmai.com அல்லது uyirosai.com@gmail.com