41. அடிநாக்கிலே நஞ்சு, நுனி நாக்கிலே அமுதம்.
42. அடிப்பானேன், பிடிப்பானேன்? அடக்குகிற வழியாய் அடக்கப்பார்!
43. அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும்.
44. அடியற்றால் (இத்துப்போனால்) நுனி விழாது இருக்குமா?
45. அடிக்கு (தூர் பகுதிக்கு) உள்ளதுதான் நடுவுக்கும்; நடுவுக்கு உள்ளதுதான் நுனிக்கும்.
46. அடியும் பட்டு புளித்த கூழும் குடிக்கணுமா?
47. அடியே...ன்னு கூப்பிட பெண்டாட்டியே இல்லை. அவன் என்னடாவென்றால், பிள்ளை எத்தனை? என்கிறான்.
48. அடிவானம் கறுத்தால் அப்போதே மழை பெய்யும்.
49. அடுக்குகிற அருமை, உடைக்கிற நாய்க்குத் தெரியுமா?
50. அடுத்த வீட்டு கூரையில் பிடித்த தீ, உன் வீட்டுக்குத் தாவ எத்தனை நாழி(நாழிகை-நேரம்) ஆகும்?
51. அடுத்தது காட்டும் பளிங்கு(கண்ணாடி).
52. அடுத்த வீட்டுக்காரி ஆம்பளப் புள்ளை பெத்தாள்னு பக்கத்து வீட்டுக்காரி அம்மிக்குழவியை எடுத்து தன் அடி வயிற்றில் குத்திக்கிட்டாளாம்!
53. அடுப்பு அனலில் (வெக்கையில்) வெண்ணையை வைத்த கதை போல.
54. அடுப்புக் கட்டிக்கும் அழகு வேண்டும்.
55. அடுத்த வீட்டுக்காரனுக்கு யோகம் வந்ததால் (பணம் வந்ததால்) அண்டை வீடு குதிரை லாயமாச்சு.
56. அடைமழை விட்டும் செடி மழை(செடியின் இலையில் இருந்து விழும் மழைத்துளிகள்) விடவில்லை.
57. அட்டமத்துச் சனி பிடித்து பிட்டத்து (உடுத்தியிருந்த) துணியையும் பிடுங்கிக் கொண்டது.
58. அட்டமத்துச் சனியை வட்டிக்கு வாங்காதே!
59. அட்டையை (பூச்சி இனத்தைச் சேர்ந்த புழு) பிடித்துக் கட்டிலில் போட்டால் அது அங்கும் கிடக்காது.
60. அணில் ஊணும், ஆமை நடையும் மெல்லத்தான்.