இலக்குவண் கவிதைகள்

கடவுளும் இன்ன பிற
வெளிச்சம்
பயத்தை ஏற்படுத்த
தொடங்கும் வரை
பாதைகள் எளிமையாகவே இருந்தன
இருளின் மீதான அனுமானங்களும்
நகரத்து மரங்கள்
நீண்ட நாட்களுக்குப் பின்
மெல்லுணர்வுகளை
அர்த்தப்படுத்தி
என் உடல் மேல்
ஓர் உயிர் ஊர்ந்துகொண்டிருக்கிறது
நீண்ட நாட்களுக்குப் பின்
சற்றே
ஒரு மரநிழலில்
கண்ணுறங்கிக்கொண்டிருக்கிறேன்
கவனிப்பாரற்று
நடைபாதையில்
பகல் முழுதும்
கவனிப்பாரற்று
இறந்து கிடந்த உடலொன்று
இரவில்
தன்முகத்தை
அலம்பிக்கொண்டு
நிலவைப் பார்த்துப் புன்னகைக்கிறது
பல்இடுக்கில் கசியும் இரத்தம் சுவைத்தபடி