
1. குட்டப்பன்
வீட்டில் இல்லை
சவ ஊர்வலம் ஒன்று
கடந்து செல்கிறது
குட்டப்பன் வீட்டினுள்
எல்லோரும்
இருக்கிறார்கள்
2. எதற்காகவும்
எதன்மேலும்
வருத்தம் கொள்வதில்லை
பழகிக்கொண்டேன்
கடந்துசொல்லவேண்டிய தூரம்
அருகிலோ
தொலைவிலோ
இருப்பதாக
குட்டப்பன் சொன்னது
ஞாபகத்திற்கு வருகிறது
3. கடவுளை தரிசித்தபோது
பயபக்தியுடன்
சூம்பிப்போன சாத்தான்
தெரிவதில்லை
குட்டப்பனிடம் சொல்லி
பீடத்திற்குப் பின்
நிலைக்கண்ணாடி ஒன்றை
வைக்கவேண்டும்
4. ஒரு கவிதையை
வாசித்துக்கொண்டிருந்தாள்
கேட்டுக்கொண்டிருந்ததன் முடிவினில்
ஒன்றும் புரியவில்லை
ஒன்றுமட்டும் புரிந்தது
எனக்கு
மொழிப்பழக்கமில்லை என்பதை
சாவிகொடுக்கப்பட்ட பொம்மையுடனான
அவளின் உரையாடல் வழியே
5. அடுத்த பிறவியல்
நீங்கள்
யாராகப் பிறக்கவிரும்புகிறீர்கள்
நம்பிக்கையில்லை
இல்லை
இருந்தால்
பிறந்தால்
ஒரு நாய்க்குட்டியாக
இல்லை
மனிதர்களில்
ம்…
அழுவதற்குமுன்
இறந்துவிடும்
சிசுவாக