முகப்பு உயிர்மை.காம் உயிர்மை பதிப்பகம் மாத இதழ் உயிரோசை வார தொகுப்பு தொடர்புகளுக்கு சந்தா எங்களைப்பற்றி
மதுரை  புத்தக திருவிழாவில் உயிர்மை பதிப்பகம்: 2010 செப்டம்பர் 2-12, உயிர்மை அரங்கு எண்: 112-113,இடம்: தமுக்கம் மைதானம்-வேலூர் புத்தக கண்காட்சியில் உயிர்மை பதிப்பகம்:2010 ஆகஸ்ட் 28 - செப்டம்பர் 6 ,உயிர்மை அரங்கு எண்: 34, இடம்: கோட்டை மைதானம்

கட்டுரை
மதுரையில் உயிரோசை விழா
-
உயிர்மை பதிப்பகம் - உயிரோசை விழா குறித்த தினமணி செய்தி
-
இரு நாடுகள் ஒன்றாக கலக்கப்படுகின்றன
தீபச்செல்வன்
பிரான்சில் என்ன நடக்கிறது?-1: பன்றிக் காய்ச்சல்
நாகரத்தினம் கிருஷ்ணா
கனவாகிப் போகுமோ நம் பாரம்பரிய விவசாயம்?
எஸ்.கிருஷ்ணன் ரஞ்சனா.
அருண் ஷோரிக்கு ஏன் கோபம் வந்தது?
நிஜந்தன்
வெகுஜன எழுத்தின் அவசியம்
ஜி. ஆர். சுரேந்தர்நாத்.
அவருதாம்பா இவரு!
தமிழ்மகன்
பாட்டு (மட்டும் தமிழில்) பாட வா
எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை
ஓ. . .செகந்திராபாத் - 23
சுப்ரபாரதிமணியன்
நெஞ்சே நெஞ்சே தமிழ் நெஞ்சே!
இந்திரஜித்
கவிதை
நகரத்தான் குறிப்புகள்
லதாமகன்
உதிர்ந்த இலையொன்றை பற்றியதானவை
நளன்
ஜிப்சி
அனுஜன்யா
மித்ரா நேசமித்திரன் கவிதைகள்
மித்ரா நேசமித்திரன்
"சுதந்திரம்" சிறுகுறிப்பு வரைக
உழவன்
மாறி நழுவலாம் மனசு
இர.ஜெ.பிரேம்குமார்
ஒளிந்திருந்த கடவுள்
கார்த்திக் பிரபு
ஒரு மழை இர‌வி‌‌ல் நடந்தவை
என்.விநாயக முருகன்
தனித்திருத்தலின் கவிதை
அசரீரி
பலூன்கள் பறக்கும் பள்ளத்தாக்கு
நந்தாகுமாரன்
சிறுகதை
வாரத் தேவை
சூர்யா
பொது
என்றார் முல்லா
தமிழில் : சஃபி
சூஃபி கதைகள்
தமிழில் : சஃபி
இந்தவாரக் கருத்துப்படம்
அரசியல் நாகரீகம்
பாபுஜி
வளரும் காங்கிரஸ்
பாபுஜி
ஹைக்கூ வரிசை
வட-அமெரிக்க ஹைக்கூ
தமிழில் : ஆர்.அபிலாஷ்
பொது
ஆட்சிப் பொறுப்பில் எலிகள்
-
ஜிப்சி
அனுஜன்யா

ஜிப்சி
 
பல நாடுகள் சுற்றிய
எந்த நாட்டுக்கும்
சொந்தமில்லாதவன்
பின்னிரவில் வந்து சேர்ந்தான்
பார்வை பறிபோன
கலங்கரை விளக்கத்தின்
காந்தப் படிகள்
அவனைச் சுழற்றி இழுத்தன
அவனின் தேர்ந்த கால்கள்
இலாவகமாக நகர்ந்தாலும்
ஒரு காளையின் உக்கிரத்துடன்
கலங்கரை விளக்கம்
அவன் உணர்வுகளைக்
கிளறி அலைக்கழித்தது
தன் நேரம் வந்ததை
இறுதியில் உணர்ந்தவன்
கீழ் நோக்கிப் பாய்கையில்
அலைகள் கொந்தளித்து
'ஓலே ஓலே' என்றன
வன்மம் தீர்த்த கலங்கரைக்கும்  
மரணத்தின் சோகத்தால்
அமைதியான அலைகளுக்கும்
அவன் இப்போது
பருந்தாக மாறி
வானில் வட்டமடிப்பது தெரியாது
 
 
எப்போதும்
 
அந்தரத்தில் மிதந்த
தேனுண்ட மலர்களுக்கு
ரெக்கைகளில் ஆயிரம்
நிறங்களும்
எட்டுத் திக்கும்
கண்காணிக்கும்
கண்களும்
வேக வாகனங்களில்
மோதிச் சரிந்தாலும்
மோட்சம் மறுத்து
அலையும் ஆன்மாக்கள்
பலரின் நெஞ்சுக்குள்
காதல் வேளைகளிலும்
சிலரின் வயிற்றுக்குள்
தேர்வுக் காலங்களிலும்
வண்ணத்துப் பூச்சிகளாகவே
வாழ்கின்றன எப்போதும்

உங்கள் கருத்துக்களை படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி
uyirosai@uyirmmai.com அல்லது uyirosai.com@gmail.com