மிளகு பெய்தனைய சுவைய புன் காய்
உலறு தலை உகாஅய்ச் சிதர் சிதர்ந்து உண்ட
புலம்பு கொள் நெடுஞ் சினை ஏறி, நினைந்து, தன்
பொறி கிளர் எருத்தம் வெறி பட மறுகி,
புன் புறா உயவும் வெந் துகள் இயவின், 5
நயந்த காதலற் புணர்ந்தனள் ஆயினும்,
சிவந்து ஒளி மழுங்கி அமர்த்தனகொல்லோ-
கோதை மயங்கினும், குறுந் தொடி நெகிழினும்,
காழ் பெயல் அல்குல் காசு முறை திரியினும்,
மாண் நலம் கையறக் கலுழும் என் 10
மாயக் குறுமகள் மலர் ஏர் கண்ணே?

ஒரு மரம்.

அந்த மரத்துக்குப் பெயர் ‘உகாய்மரம்’

அந்த உகாய் மரத்தின் ஒரு கிளையில் ஒரு காய் தொங்கிக் கொண்டிருக்கிறது. உகாய் மரத்தின் காயை வண்டுகள் மொய்த்துக் கொண்டிருக்கின்றன.

ஒரு ஆண் புறா அந்த உகாய் மரத்துக்கு வருகிறது. அந்த ஆண் புறா அந்த உகாய் மரத்தின் ஒரு கிளையில் உட்காருகிறது. அந்த ஆண் புறா அந்த உகாய் மரத்தில் தொங்கிக் கொண்டிருக்கிற ஒரு காயைப் பார்க்கிறது. அந்தக் காயை மொய்த்துக் கொண்டிருக்கிற வண்டுகளை அந்த ஆண் புறா துரத்துகிரது.

அந்த உகாய் மரத்தின் காயை அந்த ஆண் புறா பேராசையோடு தின்று கொண்டிருக்கிறது.

உகாய் மரத்தின் காயைத் தின்ற அந்த ஆண் புறா அந்த உகாய் மரத்தின் உச்சாணிக்கொப்பில் உக்காந்திருக்கிறது.

அந்த ஆண் புறாவுக்குத் தலை சுற்றுகிறது. அந்த ஆண் புறாவுக்கு அதன் பிடரி மயிர்கள் சிலிர்க்கின்றன. அந்த ஆண் புறா தலையைத் தலையை உதறிக் கொண்டிருக்கிறது.

அந்த ஆண் புறா தின்னது ஒரு விஷக்காய்.

ஒரு விஷக்காயைத் தெரியாத்தனமாத் தின்று விட்டோமே என்று அந்த ஆண் புறா அந்த உகாய் மரத்தில் வருத்தத்தோடு உட்கார்ந்திருக்கிறது.

மிளைக் கந்தன் நாகனார்
நற்றிணை 66