யாரொருவரையும் நீங்கள் அறிந்து கொள்ளும் வரை சாதாரணமாகத் தான் தோற்றமளிப்பார்கள்

-நாடோடிக் கூற்று

தமிழில் அரிதினும் அரிதான வரலாற்று அங்கத திரைப்பட முயற்சிகளில் எஸ் பிக்சர்ஸ் சார்பாக ஷங்கர் தயாரித்த சிம்புதேவனின் முதல் படமான இம்சை அரசன் இருபத்திமூன்றாம் புலிகேசிக்கு முக்கிய இடம் உண்டு

காலம் காலமாக கட்டமைக்கப்பட்டு வந்த மற்றும் ஏற்றிச் செல்லப்பட்ட ராஜவேடங்களின் புனித பிம்பங்களை எல்லாம் அடித்து  நொறுக்கியது இக்கதையின் சிறப்பம்சம் எத்தனை காலம்தான் அரசன் என்ற உடன் மிடுக்கும் கம்பீரமும் என்று தோன்றச் செய்து கொண்டிருப்பார்கள் இங்கே புலிகேசி ஆங்கில டபிள்யூ போல் மீசை கொண்டவன் அவனுடைய கொனஷ்டைகள் அந்தப்  பாளையத்தின் சகலரையும் மனம் சுளிக்க வைத்தவை. அரசர் மொக்கையப்பருக்கு நெடு நாட்களுக்குப் பிறகு பிறந்த இரட்டைக் குழந்தைகளில் சுயபுத்தி குழந்தையை கொன்றுவிடச் சொல்லி தாய்மாமன் சங்கிலிமாயன் சதி செய்கிறான். சொல்புத்தி குழந்தை மாமன்னர் புலிகேசி ஆக மாற்றுகிறது காலம் மாமா வைத்ததுதான் சட்டம் என்பதை கண்மூடித்தனமாக நம்புகிற புலிகேசி ஆங்கிலேயர்களுக்கு துணை ஒலி
தட்டுபவன். அவன் செய்யும் அராஜகங்களுக்கு அளவே இல்லை நினைத்ததை எல்லாம் நிறைவேற்றி பார்ப்பவன் குரூர மனம் படைத்த வில்லன் அல்லன் என்றபோதும் அடுத்த கணம் என்ன நிகழுமோ என்கிற அச்சத்தில் மக்களைத் துன்புறுத்துகிறான்  கம்பளிப்பூச்சி மகாராஜா.

தன்னை எப்படி புகழ்ந்து ஓத வேண்டும் என்பதிலிருந்து தொடங்குகிறது புலிகேசியின் இம்சை மாடிப்படி பக்கவாட்டு கைப்பிடிச் சுவரில் இறங்குவது ஆகட்டும் வழுக்குவது ஆகட்டும் காவலாளிகளை எடக்குமடக்காக கேள்வி கேட்டு அகற்றுவதில் ஆகட்டும் வித வினோத தண்டனை வழங்குவதில் ஆகட்டும் செய்தி கொண்டு வந்த புறாவை வறுத்து தின்பதில் ஆகட்டும் அவனுக்கு நிகர் அவன் மாத்திரமே அவனை மந்தத்திலேயே வைத்திருக்கும் சகுனி மாமனுக்கு அவையெல்லாம் மகிழ்ச்சி ஆனாலும் புலிகேசி பெற்றோர்களுக்கோ அவன் ஒரு கோமாளியாகவே தென்படுகிறான்.ராஜகுருவின் மீறி கட்டளையை மீறி அந்த இரண்டாவது குழந்தை தப்பிப் பிழைக்கிறது. உக்கிர புத்தனாக பல்கலை ஆக செல்வனாக வளர்ந்து திரும்புகிறான் நண்பர்களுடன் சேர்ந்து நாட்டின் போக்கை ஏதாவது செய்து திருத்த வேண்டும் என்று சபதம் கொள்கிறான் அரசனைக் கொல்ல அரண்மனையிலேயே ஆங்காங்கே அவ்வப்பொழுது சதிகள் நடக்கின்றன ஒரு சந்தர்ப்பத்தில் புலிகேசி சிறைக்குச் செல்கிறார் உக்கிரபுத்திரன் புலிகேசி வேடத்தில் ஆட்சியைப் பிடிக்கிறான் சகோதரர்கள் இணைந்தார்களா நல்லது நிறைந்த தான் என்பதெல்லாம் இரண்டாவது பாதியில் கதை

சிம்புதேவன் படக்கதை ஒன்றின் கதாபாத்திரமாக பிரபல பத்திரிக்கையில் வரைந்த இம்சை அரசன் புலிகேசி பாத்திரம் திரைப்படமாக கண்டது இந்தியாவில் சொற்பமாக உருவாக்கப்பட்ட spoof வகைமை திரைப்படங்களில் புலிகேசி முக்கியமான ஒன்று குதூகலத்தின் வழியாகவும் கொண்டாட்டத்தின் மறைபொருளாகவும் மாறுகையில் எந்த ஒரு கருத்தும் மிகத் துல்லியமாக காண்பவர் மனங்களை தைக்க வல்லவை புலிகேசி படமானது ராஜ காலப் பின்னணியில் சமகாலத்தின் அத்தனை மேடு பள்ளங்களையும் எள்ளி நகையாடிற்று.

அயல்நாட்டு குளிர்பானங்களின் வருகை உள்ளூர் பிரபலங்கள் விளம்பர மாடல்களாக மாறுவது அவற்றின் தயாரிப்பு செலவு இரக்கமற்ற முதலாளிகளின் லாப நோக்கு சண்டைகளுக்கு ஸ்பான்சர் செய்வது என அதகளம் காட்டியது படம் மனோரமா நாகேஷ் நாசர் ஸ்ரீமன் மோனிகா இவர்களுடன் மனோபாலா முத்துக்காளை இளவரசு சிங்கமுத்து சிசர் மனோகர் தியாகு வெண்ணிறாடை மூர்த்தி நகைச்சுவை பட்டாளத்தோடு இருவேடங்களில் நடித்தார் வடிவேலு அவரது திரைவாழ்வில் மகா வெற்றிப்படமாக மாறியது படங்களில் விடுபடல்களும் புலிகேசி படம் எங்கும் இங்கு நிரம்பிய அங்கதமும் கூர்மையான வசனங்களும் கிருஷ்ணமூர்த்தியின் கலை இயக்கமும் படத்தை தூக்கி நிறுத்தின வடிவேலு ரசிகர்கள் ஒவ்வொருவரின் மனங்களுக்கும் கூடு விட்டுக் கூடு பாய்ந்தார் தனித்த திரைமொழியும் பாத்திர வித்தியாசமும் தொழில்நுட்ப நேர்த்தியும் புலிகேசி திரைப்படத்தை தமிழக மக்களின் கொண்டாட்ட சினிமாவாகவே மாற்றியது

வடிவேலுவுக்கு எதெல்லாம் பலமோ அவற்றை எல்லாமும் சரிவர அவதானித்து அழகிய நகைச்சுவை மாலையாகக் கோர்த்து அவருக்கே அணிவித்தார் சிம்புதேவன். முழுமையான நாயகத்துவத்தின் காரிஸ்மா செல்வாக்குடன் எடுக்கப் பட்ட ஆள்மாறாட்ட இரட்டைவேடத் திரைக்கதையை கோமாளி ராஜா ஒருவனைக் கொண்டு மாற்றுப் புனைவாக முன்னெடுக்கும் போது மொத்தமாக நிராகரிக்கப் படக் கூடிய அபாயமும் அதனுள் நிலவவே செய்யும். அதனை எளிதான தன் திரை உத்திகளால் தாண்டியபடியே உத்தமபுத்திரன் சாயலுடனான கதையினைக் கொண்டு வடிவேலு எனும் பெருவிருப்ப பிம்பத்தை மக்களின் மனம் மயக்கும் சிரிப்பு ராஜாங்கத்தைக் கட்டமைப்பதற்கு முயன்று அதில் பெருவெற்றியும் அடைந்தார். இன்னும் நெடிய காலத்துக்கு நினைத்த மாத்திரத்தில் மனவசியம் செய்யும் மக்கள் ப்ரிய சினிமாவாக இம்சை அரசன் இருபத்தி மூன்றாம் புலிகேசியின் இடம் சிறப்பானது. மற்றும் தனித்தது.

முந்தைய தொடர்: http://bit.ly/2Zmn6nX