கள்ளக்குறிச்சி பிரபு, அறந்தாங்கி ரத்தின சபாபதி, விருத்தாசலம் கலைச்செல்வன் ஆகிய அதிமுக எம்எல்ஏக்கள் 3 பேருக்கும் சபாநாயகர் தனபால் அனுப்பிய நோட்டீஸ் சென்றடைந்துள்ளது.

அதிமுக எம்எல்ஏக்கள் கள்ளக்குறிச்சி பிரபு, அறந்தாங்கி ரத்தினசபாபதி, விருத்தாசலம் கலைச்செல்வனை ஆகிய மூன்று பேரும் அதிமுகவிற்கு எதிராகச் செயல்படுவதாகச் சபாநாயகர் தனபாலிடம் புகார் மனு ஒன்றை அளித்திருக்கிறார் அதிமுக கொறடா ராஜேந்திரன். அந்த மனுவில் 3 எம்எல்ஏக்களையும் தகுதி நீக்கம் செய்யச் சபாநாயகர் தனபாலிடம் வலியுறுத்தியுள்ளதாக ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இந்த புகார் தொடர்பாக 3 எம்எல்ஏக்களுக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளார் சபாநாயகர் தனபால். அந்த நோட்டீஸ் இன்று (மே 2) 3 எம்எல்ஏக்களுக்கும் சென்றடைந்துள்ளது. 185 பக்கங்களைக் கொண்ட நோட்டீஸில் டிடிவி தினகரனுடன் இருக்கும் புகைப்படங்களும் இணைத்து அனுப்பப்பட்டுள்ளன. நோட்டீஸ் கையில் கிடைத்த 7 நாட்களுக்குள் எம்எல்ஏக்கள் 3பேரும் சபாநாயகர் தனபாலிடம் விளக்கம் அளிக்க வேண்டும். .