நாடாளுமன்ற, சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் நாளை நண்பகல் வேட்புமனு தாக்கல் செய்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டியுள்ள நிலையில், தேர்தல் அறிக்கைகள், பிரச்சாரங்கள் என தமிழகத்திலும் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. நாடாளுமன்ற தேர்தல் மற்றும் தமிழகத்தில் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 19ஆம் தொடங்கியது.

கடந்த 17ஆம் தேதி அதிமுக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட்து. இந்நிலையில், அதிமுகவின் அனைத்து வேட்பாளர்களும் நாளை நண்பகல் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளதாக இன்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.