க்களவை தேர்தலை முன்னிட்டு அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று (மார்ச் 22) வெளியிட்டார்.

2019 மக்களவை தேர்தலிலும், சட்டமன்ற இடைத்தேர்தலிலும் போட்டியிடும் அமமுக வேட்பாளர்களின் இரண்டாம் கட்ட இறுதி பட்டியலை இன்று காலையில் வெளியிட்ட டிடிவி தினகரன், தற்போது தேர்தல் அறிக்கையும் வெளியிட்டுள்ளார்.

தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்;

தமிழகத்தில் இனிமேல் மதுபான உற்பத்தி ஆலைக்கு அனுமதி இல்லை, கொள்கை முடிவு எடுக்கப்படும்.

60 வயது முதிர்ந்த ஆண் – பெண், விவசாய தொழிலாளர்கள், நெசவாளர்களுக்கு மாதம் ரூ.4000 ரூபாய் உதவி தொகை வழங்கப்படும்.

முதியோருக்கான மாத உதவித்தொகை ரூ.1000த்திலிருந்து ரூ.2000ஆக உயர்த்தப்படும்.

நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு வலியுறுத்தப்படும்.

கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்ற அமமுக பாடுபடும். அப்படி மாற்றுவதால் மத்திய அரசால் கிடைக்கக்கூடிய நிதி உதவிகள் தடைபடாமல் பார்த்துக்கொள்ளவும் கவனம் செலுத்துவோம்.

விவசாயத்தை பாதிக்கும் எந்த திட்டத்தையும், தொழிற்சாலையையும் டெல்டா மாவட்டங்களில் அமைக்க நிரந்தர தடை ஏற்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். டெல்டா மாவட்டங்களை வேளாண் மண்டலம் என அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

அனைத்து விவசாய கடன்களும் தள்ளுபடி, கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட அனைத்து சிறு வணிக கடன்களும் தள்ளுபடி.

7 பேர் விடுதலை செய்யப்பட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிக்க, கண்காணிக்க தனி ஆணையம் ஏற்படுத்தப்படும்.

பொறியியல் பட்டதாரிகளுக்கு குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயம் செய்யப்படும்.

மாணவர்களின் கல்விக்கடன் தள்ளுபடி செய்யப்படும்.

நீட் தேர்வை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

கைத்தறி நெசவாளர்கள் அனைவருக்கும் இலவச மின்சாரம் வழங்கப்படும்.

தனியார் நிறுவன ஊழியர்களின் திருமண செலவுகளுக்கு ரூ.2 லட்சம் வட்டியில்லா கடன்.

மெட்ரோ ரயில் திட்டம் கோவை, திருச்சி, மதுரைக்கு விரிவாக்கம்,  சுங்கச்சாவடிகளை மூட நடவடிக்கை.

கிராமப்புறத்தில் சிறுவணிகக் கடன் ரூ.50,000 முதல் ரூ.2 லட்சம் வரை வழங்கப்படும்.

ஏழை கல்லூரி மாணவிகளுக்கு ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம் கல்வி உதவித்தொகை.

கல்லூரி மாணவர்களுக்கு கையடக்க கணிணி (TAB) வழங்கப்படும்.

பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோரை கடுமையாக தண்டிக்க உரிய சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்படும்.

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரபட்டணத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்படும்

ஜிஎஸ்டி அமலாக்கத்தால் மூடப்பட்ட சிறு, குறு தொழில் நிறுவனங்களை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

சீன பட்டாசுகளை முற்றிலும் தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

ஊராட்சி ஒன்றியம்தோறும் அரசு ஊழியர்கள் குடியிருப்பு அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

ஜாக்டோ-ஜியோ கோரிக்கைகள் அனைத்திற்கும் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்.

மாணவிகளுக்கு இலவச மருத்துவ பரிசோதனை, இலவச சானிட்டரி நாப்கின் வழங்கப்படும்.