முரசொலி நிர்வாக இயக்குநராக இருந்த உதயநிதி ஸ்டாலினுக்கு முதல் முறையாக கட்சியில் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. திமுக கட்சி பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன், கட்சியின் இளைஞரணிச் செயலாளராக உதயநிதி ஸ்டாலின் நியமித்தார்.

இதற்கு முன்னதாக வெள்ளக்கோவில் சாமிநாதன் திமுக இளைஞரணி செயலாளராக இருந்தார். அவரது ராஜினாமாவை தொடர்ந்து திமுக தற்போது உதயநிதி ஸ்டாலினை இளைஞரணி செயலாளராக அறிவித்துள்ளது. திமுக இளைஞரணி செயலாளர் பதவி என்பது வலுவான அமைப்பினை கொண்ட, களத்தில் தீவிரமாக பயணிக்கும் இளைஞர்களை வழிநடத்தும் ஒரு பெரிய பொறுப்பாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் உதயநிதி ஸ்டாலினுக்கு இந்தப் பதவி வழங்கப்பட்டது கட்சி பிரமுகர்கள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் பலத்த வரவேற்ப்பை பெற்றுள்ளது.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம் முழுவதும் திமுக கட்சியின் தொண்டனாக பயணித்த உதயநிதி ஸ்டாலின் பல பிரச்சாரங்களில் கலந்துகொண்டு கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.