திருப்பரங்குன்றம், சூலூர் உள்ளிட்ட 4 சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களின் பெயர் பட்டியல் இன்று (ஏப்ரல் 13) வெளியிட்டப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மக்களவை தேர்தல் மற்றும் காலியாகவுள்ள 22 சட்டமன்ற தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல் வரும் 18ஆம் தேதி நடக்கவிருக்கிறது. மீதமுள்ள திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், சூலூர், அரவக்குறிச்சி ஆகிய நான்கு தொகுதிகளுக்கு மே 19ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

இந்நிலையில், இந்த 4 சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களின் பெயரை இன்று அறிவித்துள்ளார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.

திருப்பரங்குன்றம்- பி.சரவணனசட்

ஒட்டப்பிடாரம்- எம்.சி.சண்முகையா

அரவக்குறிச்சி- செந்தில் பாலாஜி

சூலூர்- பொங்கலூர் நா.பழனிசாமி