‘தேவ்’ படத்துக்குப் பிறகு அடுத்தடுத்து இரண்டு படங்களில் நடிக்கிறார் கார்த்தி. இப்போது அவர் நடிப்பில் உருவாகிவரும் ‘கைதி’ திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார்.

‘ரெமோ’ பாக்யராஜ் கண்ணன் இயக்கும் படத்தில் நடித்தபிறகு ‘திரிஷ்யம்’ ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கார்த்தி நடிப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

இந்தப் படத்தில் கார்த்தியுடன் அவரது அண்ணி ஜோதிகாவும் நடிப்பதாகக் கூறப்பட்ட நிலையில், இவர்களின் கதாபாத்திரம் இப்போது தெரியவந்திருக்கிறது.

ஜீத்து ஜோசப் இயக்கும் படத்தில் ஜோதிகா அக்காவாகவும், கார்த்தி தம்பியாகவும் நடிப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.