ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கார்த்தி, ஜோதிகா, சத்யராஜ் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியது. இந்த தகவலோடு படம்குறித்த அறிவிப்புகளை கார்த்தி வெளியிட்டிருக்கிறார்.
ஜோதிகாவின் தம்பியாக கார்த்தி நடிக்கும் இப்படத்தின் மற்றொரு முக்கிய பாத்திரத்தில் சத்யராஜ் நடிக்கிறார்.  சத்யராஜ் அப்பாவாக நடிப்பதாக தெரிகிறது.
படப்பிடிப்பு தொடங்கிய தகவலை அறிவித்திருக்கும் கார்த்தி, முதன்முறையாக அண்ணியுடன் இணைந்து நடிக்கவுள்ளது மகிழ்ச்சியளிப்பதாக கூறியுள்ளார்.
’96’ பட புகழ் கோவிந்த் வசந்தா இசையமைக்கும் இப்படத்துக்கு ஆர்.டி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார். பேரலல் மைண்ட்ஸ் பிலிம்ஸ் இதனை தயாரிக்கிறது. படப்பிடிப்பு தொடங்கியிருக்கும் இன்றே ஆக்டோபர் மாதம் படம் வெளியாகுமென்ற தகவலையும் அறிவித்துள்ளனர்.

முதல்முதலில் ஜோதிகாவுடன் கார்த்தி இணைந்து நடிக்கும் படத்தை ஜித்துஜோசப் இயக்குகிறார்.

மலையாள இயக்குநரான ஜித்துஜோசப் ஏற்கனவே தமிழில் கமலை வைத்து பாபநாசம் படத்தை இயக்கியிருக்கிறார்.