தேர்தல் பிரச்சாரங்களில் தனது புகைப்படம் பயன்படுத்தபடுவதற்கு இசைஞானி இளையராஜா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

தேர்தல் நேரங்களில் பிரபலங்களின் புகைப்படத்தை பயன்படுத்தி, குறித்த நபர் தமக்கு ஆதரவளிப்பதை போன்ற பிம்பங்களை அரசியல் காட்சிகள் ஏற்படுத்துவது வழக்கம்.

அவ்வாறு இம்முறையும் சில இடங்களில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரங்களில் தனது புகைப்படம் பயன்படுத்தப்பட்டது குறித்து இசைஞானி இளையராஜா விளக்கம் அளித்திருக்கிறார்.

“அரசியல் ஆதாயத்துக்காக தனது புகைப்படத்தை பயன்படுத்த வேண்டாம்” என கேட்டுக்கொண்டுள்ள இளையராஜா, தான் யாருக்கும் ஆதரவு அளிக்கவில்லை என கூறியுள்ளார்.