அருள்நிதி நடிக்கும் அடுத்த திரைப்படத்தை சீனு ராமசாமி இயக்குவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தப் படத்தின் மூலம் முதன்முறையாக யுவனின் இசையில் நடிக்கும் வாய்ப்பை பெற்றிருக்கிறார் அருள்நிதி.

இரவுக்கு ஆயிரம் கண்கள் படத்தை தொடர்ந்து 2019-ல் அருள்நிதியின் முதல் படமாக வெளியாகவிருக்கிறது ‘கே 13’ (K13). சைகோலொஜிக்கல் த்ரில்லர் படமான இதில் ஷ்ரதா ஸ்ரீநாத் நாயகியாக நடிக்கிறார். பரத் நீலகண்டன் இயக்கும் இப்படத்தின் வெளியீடு பற்றிய தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

இந்நிலையில், சீனு ராமசாமி இயக்கத்தில் அருள்நிதி நடிக்கும் படம் குறித்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. டைம்லைன் சினிமாஸ் தயாரிக்க, முன்னணி படத்தொகுப்பாளர் ஸ்ரீகர் பிரசாத் இப்படத்தில் பணிபுரிகிறார்.