தனது நடிப்பில் உருவாகியுள்ள ‘அயோக்யா’ திரைப்படம் இன்று அறிவித்தபடி வெளியாகததால் நடிகர் விஷால் அதிருப்தியடைந்துள்ளார்.
மேலும், தயாரிப்பாளர் சங்க தனி அதிகாரிக்கு உதவியாக அமைக்கப்பட்டுள்ள 9 பேர் கொண்ட குழுவுக்கு, தடைவிதிக்க வேண்டுமென உயர் நீதிமன்றத்தில் விஷால் கோரிக்கை விடுத்திருந்தார். அதனையும் உயர் நீதிமன்றம் இன்று நிராகரித்தது.
ஒரேநாளில் அடுத்தடுத்து இரண்டு நெருக்கடிகள் ஏற்பட்டதால் நடிகர் விஷால் அதிருப்தியடைந்திருக்கிறார், குறிப்பாக ‘அயோக்யா’ திரைப்படம் வெளியாகாமல் போனதற்கு அவர் உருக்கமாக ட்வீட் செய்துள்ளார்.
வெங்கட் மோகன் இயக்கியுள்ள ‘அயோக்யா’ படத்துக்கு சாம் C.S இசையமைத்துள்ளார். ராஷி கண்ணா, பார்த்திபன் உள்ளிட்டவர்கள் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.