விஷால் நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றியடைந்த ‘இரும்புத்திரை’ திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை அறிமுக இயக்குநர் ஆனந்த் இயக்குவது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

P.S. மித்ரன் இயக்கிய ‘இரும்புத்திரை’ சைபர் திரில்லர் கதையமைப்பில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இதில் அர்ஜுன் முக்கிய பாத்திரத்தில் நடித்தார். சமந்தா நாயகியாக நடிக்க, யுவன் இசையும் படத்துக்கு பலம் சேர்த்தது.

P.S. மித்ரன் இப்போது சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தை இயக்கி வருவதால் ‘இரும்புத்திரை 2’ பற்றி பேசப்பட்டபோது உறுதியான தகவல்கள் எதுவும் சொல்லப்படவில்லை.

தற்போது வெளியாகியிருக்கும் தகவலின்படி ‘இரும்புத்திரை 2’ படத்தை மித்ரனுக்கு பதிலாக ஆனந்த் இயக்குவதாகவும், முதற்கட்ட பணிகள் தொடங்கப்பட்டுவிட்ட இந்த ப்ராஜெக்ட்டில் விரைவில் விஷால் இணைவதாகவும் கூறப்பட்டுள்ளது.