கோபி நயினார் இயக்கவுள்ள புதிய திரைப்படத்தில் பாபி சிம்ஹா நாயகனாக நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

‘அறம்’ படத்தை இயக்கிய கோபி நயினார் தற்போது ஜெய் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மையான பாத்திரங்களில் நடிக்கும் திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

வடசென்னை பகுதியில் நிகழும் கிக் பாக்ஸிங் சார்ந்த படமாக இது உருவாகி வருகிறது. இதன்பிறகு ‘அறம் 2’ படத்தில் கோபி நயினார் கவனம் செலுத்துவாரென கூறப்பட்டது.

இந்நிலையில், பாபி சிம்ஹா நடிக்கும் பொழுதுபோக்கு அம்சங்கள் கொண்ட திரைப்படத்தை அவர் இயக்குவதாகவும், இதன் முக்கிய பாத்திரம் ஒன்றில் பாலிவுட் நடிகர் நடிக்கப்போவதாகவும் கூறப்படுகிறது.