சந்தானம் – யோகிபாபு இணைந்து நடிக்கும் புதிய படத்துக்கு ‘டகால்ட்டி’ என தலைப்பிட்டுள்ளனர். இதன் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.
‘தில்லுக்கு துட்டு 2’ படத்துக்குப் பிறகு ‘ஏ 1’ படத்திலும், கண்ணன் இயக்கும் படத்திலும் சந்தானம் நடித்து வருகிறார்.
யோகிபாபுவும் தர்மபிரபு, கூர்க்கா என படுபிஸியாக உள்ளார். இந்நிலையில், இந்த இருவரும் சேர்ந்து நடிக்கும் கலக்கலான கூட்டணி ‘டகால்ட்டி’ படத்தில் உருவாகியிருக்கிறது.
விஜய் ஆனந்த் இயக்கும் இப்படத்துக்கு தீபக் குமார் ஒளிப்பதிவு செய்ய, T.S.சுரேஷ் படத்தொகுப்பு செய்கிறார். இதன் முதற்கட்ட படப்பிடிப்பு மும்பையில் நிறைவடைந்திருக்கிறது.