வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெறாமலேயே நடிகர் சிவகார்த்திகேயனை வாக்களிக்க அனுமதித்தது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
தமிழகத்தில் கடந்த 18-ஆம் தேதி மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரேகட்டமாக நடைபெற்று முடிந்தது.
வாக்காளர் பட்டியலில் ஏராளமானோரின் பெயர் இடம்பெறாதது இந்த தேர்தலில் நடைபெற்ற மிகமுக்கிய குளறுபடியாக பார்க்கப்படுகிறது. இதில் பல்வேறு பிரபலங்களும் சிக்கித் தவித்தனர்.
நடிகர் சிவகார்த்திகேயன் பெயரும் வாக்காளர் பட்டியலில் இடம்பெறாத நிலையில், அவரை வாக்களிக்க அனுமதித்துள்ளனர். இந்த விவகாரம் சர்ச்சையானதால் வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாமல் வாக்களிக்க அனுமதித்தது தொடர்பில் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டிருப்பதாக தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார்.