நடிகர்களின் பொது வாழ்க்கை மற்றும் மதிப்பு மரியாதையை பாதுகாப்பதற்காக நடிகர் சங்கத்தில் புதிய குழு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
தென்னிந்திய கலைஞர்கள் சங்கம் மற்றும் நடிகர் சங்கம் இணைந்து உருவாக்கியிருக்கும் இந்த குழுவானது, நடிகர்களின் பொதுவாழ்க்கை, மதிப்பு மரியாதையை பாதுகாக்கும் பிரதான நோக்கத்தில் அமைக்கப்டிருக்கிறது.
சுஹாசினி, ரோகினி, கார்த்தி, பூச்சி முருகன், லலிதா குமாரி மற்றும் வழக்கறிஞர் கிருஷ்ணா ரவீந்திரன் உள்ளிட்டவர்கள் இணைந்து இக்குழுவை அமைத்துள்ளனர். இதன்மூலம் கலைஞர்களுக்கு பல்வேறு நிலையில் பாதுகாப்பு உறுதிசெய்யப்படுமென தெரிகிறது.