‘பிங்க்’ திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கான அஜித் நடிக்கும் ‘நேர்கொண்ட பார்வை’ படப்பிடிப்பில் புதிய திருப்பம் ஏற்பட்டிருக்கிறது.

தமிழில் அஜித், வித்யாபாலன், ஷ்ரதா ஸ்ரீநாத் உள்ளிட்ட பலர் நடிக்கும் ‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் இறுதிவரை நடைபெறுமென கூறப்பட்டது.

ஆனால், இதன் படப்பிடிப்பு முழுவதுமாக நிறைவுற்று படக்குழுவினர் சென்னை திரும்பிவிட்டதாக புதிய தகவல் ஒன்று கசிந்திருக்கிறது. எது எப்படியோ ‘நேர்கொண்ட பார்வை’ படப்பிடிப்பு நிறைவு பெற்று வெளியீட்டுக்கு தயாராவது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்திதான்.

ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கும் இப்படத்தை சதுரங்க வேட்டை புகழ் வினோத் இயக்கியுள்ளார். வருகின்ற ஆகஸ்ட் 10-ஆம் தேதி இதனை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.