சீமராஜா’ திரைப்படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘மிஸ்டர் லோக்கல்’ திரைப்படம் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. இப்படத்தின்  வெளியீட்டை மே ஒன்றுக்கு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அவரது அடுத்த திரைப்படத்தின் படப்பிடிப்பும் தற்போது தொடங்கியிருக்கிறது.
‘மிஸ்டர் லோக்கல்’ திரைப்படத்துக்கு பிறகு சிவகார்த்திகேயன் ‘ஹீரோ’ என்கிற புதிய திரைப்படத்தில் நடிப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. ‘இரும்புத்திரை’ படத்தை இயக்கிய P. S.மித்ரன் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று ஆரவாரத்துடன் தொடங்கியது.
இதனை மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ள ஹீரோ சிவகார்த்திகேயன், இயக்குநர் P. S.மித்ரன் உடனான தனது பழைய நட்பை வெளிப்படுத்தி அனைவரையும் திகைக்கச் செய்திருக்கிறார்.
தொடக்க காலத்தில் ஒரு குறும்படத்துக்காக இயக்குநர் P. S.மித்ரன் உடன் பணியாற்றியதை நினைவுக்கூர்ந்து படப்பிடிப்பு தகவலை சிவகார்த்திகேயன் ட்வீட் செய்திருப்பது ரசிகர்களை உற்சாகப்படுத்தியிருக்கிறது.