மணிரத்னத்தின் கனவு திரைப்படமான ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள், அவர்கள் ஏற்கும் பாத்திரம் எது என்கிற ஒரு செய்தி பரபரப்பாக பேசப்படுகிறது.

கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ காவியத்தை படமாக்க நீண்ட காலமாக முயற்சித்து வருகிறார் மணிரத்னம். அமிதாப் பச்சன், விக்ரம், ஐஸ்வர்யா ராய், ஜெயம், ரவி, கார்த்தி உள்ளிட்ட நட்சத்திரங்களை கொண்டு தமிழ், ஹிந்தி மற்றும் தெலுங்கில் இப்படத்தை தற்போது இயக்கும் முயற்சியில் மணிரத்னம் ஈடுபட்டுள்ளார்.

மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகும் இப்படத்தை லைகா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரிக்கின்றன.

இந்நிலையில் அமிதாப்பச்சன் சுந்தர சோழராக, விக்ரம் ஆதித்ய கரிகாலனாக, அருள்மொழி வர்மனாக ஜெயம் ரவி, வல்லவராயன் வந்தியத்தேவனாக கார்த்தி, நந்தினியாக ஐஸ்வர்யா ராய், குந்தவை நாச்சியாராக கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டவர்கள் நடிக்கின்றனர் என தகவல் வெளியாகியிருக்கிறது.