2009-ஆம் ஆண்டு வெளியான ‘ஈரம்’ திரைப்படம் சிறந்த திரில்லர் வகை படமாக பெரும் வெற்றியடைந்தது. இதனை தொடர்ந்து இயக்குநர் அறிவழகன் இயக்கிய அனைத்து படங்களுமே வெவ்வேறு பாணியில் உருவான தனித்துவமான படங்கள் தான்.
இந்நிலையில், ‘ஈரம்’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இயக்குநர் அறிவழகன், மீண்டும் அதே குழுவுடன் இணைந்து புதிய திரில்லர் படத்தை தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வல்லினம், ஆறாது சினம், குற்றம் 23 என அனைத்துமே ஹிட் வரிசையில் இடம்பெற்ற வெகுஜன படங்களாக அறிவழகனுக்கு அமைந்தது. அந்த வரிசையில் அடுத்து லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவை வைத்து அறிவழகன் படம் இயக்குவதாக கூறப்பட்டது.
ஆனால், குறித்த திரைப்படம் தாமாதமாகிவந்த நிலையில், மீண்டும் ‘ஈரம்’ படக்குழுவுடன் இணைந்து மற்றொரு திரில்லர் படத்தை அறிவழகன் இயக்கவுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இந்த படத்திலும் ஆதி ஹீரோவாக நடிக்கவுள்ளார்.