‘ரஜினி 167’ படத்தின் வில்லனாக எஸ்.ஜே. சூர்யா நடிப்பதாக வெளியான தகவலை படக்குழு மறுத்துள்ளது.

‘பேட்ட’ படத்துக்கு பிறகு ரஜினிகாந்த் நடிக்கும் புதிய திரைப்படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு வருகின்ற ஏப்ரல் 10-ஆம் தேதி மும்பையில் தொடங்குவதாக தெரிகிறது.

முக்கிய பாத்திரத்தில் நயன்தாராவும் ரஜினி மகளாக நிவேதிதா தாமஸும் நடிக்கவுள்ள இப்படத்தை முன்வைத்து பல்வேறு வதந்திகள் சொல்லப்படுகின்றன. அதில் ஒன்றுதான் எஸ்.ஜே. சூர்யா வில்லனாக நடிப்பதாக வெளியான வதந்தி.

இந்தத் தகவலை முற்றிலும் மறுத்துள்ள படக்குழு, நயன்தாராவை தவிர இப்படத்தில் நடிக்கும் யாரும் இதுவரை உறுதி செய்யப்படவில்லை என தெரிவித்துள்ளது.