எதிர்வரும் ஏப்ரல் 12-ஆம் தேதி வெளியாகவிருந்த ‘ஆர்.கே. நகர்’ திரைப்படத்தை வெளியிட முடியாத நிலை ஏற்பட்டதற்கு வருத்தம் தெரிவித்து இயக்குநர் வெங்கட் பிரபு காணொளி வெளியிட்டுள்ளார்.

வைபவ் நாயகனாக நடிக்கும் ‘ஆர்.கே. நகர்’ திரைப்படம் வெங்கட் பிரபுவின் பிளாக் டிக்கெட் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ளது. சரவண ராஜன் இயக்கியுள்ள இப்படத்துக்கு பிரேம்ஜி அமரன் இசையமைத்துள்ளார்.

வருகின்ற ஏப்ரல் 12-ஆம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்ட இப்படத்தை திடீரென வெளியிட முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. சில பிரச்சனைகளின் காரணமாக ‘ஆர்.கே. நகர்’ திரைப்படத்தை வெளியிட முடியவில்லை. தேர்தலுக்கு பிறகு தான் வெளியிட முடியும் என்கிறார்கள். ஆர்.கே. நகர் அரசியல் திரைபடமல்ல, ஜனரஞ்சக திரைப்படம்தான். தல அஜித் பாணியில் ஒன்றை மட்டும் சொல்லிக்கொள்கிறேன். ‘வாழு, வாழ விடு’ என்று ட்விட்டரில் வெளியிட்டுள்ள காணொளியில் வெங்கட் பிரபு கூறியுள்ளார்.