இயக்குநர் அட்லீயின் அலுவலகத்துக்கு பாலிவுட் நடிகர் ஷாருக்கான் சென்றது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இதற்கான காரணம் வெளியாகியிருக்கிறது.

‘தெறி’, ‘மெர்சல்’ ஆகிய படங்களைத் தொடர்ந்து மீண்டும் விஜய் நடிக்கும் படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்றிருக்கிறார் அட்லீ.

இரு தினங்களுக்கு முன்னர் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை ஷாருக்கானுடன் பார்த்ததும் பின்னர் அவரது அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்தியதும் அட்லீ குறித்த பேச்சை அதிகரித்தது.

இதுதொடர்பில் வெளியாகியிருக்கும் தகவலில், தளபதி 63 படத்தை முடித்துவிட்டு ஷாருக்கான் நடிக்கும் பாலிவுட் படத்தை இயக்குவது தொடர்பாகத்தான் அட்லீ அலுவலகத்தில் ஷாருக்கான் பேச்சுவார்த்தை நடத்தினார் என கூறப்பட்டிருக்கிறது.