டெல்லியில் உள்ள குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற்ற இரண்டாம் கட்ட பத்ம விருதுகள் வழங்கும் விழாவில் சமூக சேவகி சின்னப்பிள்ளைக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பத்மஸ்ரீ விருது வழங்கினார்.

மேலும் இவ்விழாவில் இஸ்ரோ முன்னால் விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு பத்ம விபூஷன் விருதும், நர்த்தகி நடராஜன், கால்பந்து வீரர் சுனில் சேத்ரி,  கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் உள்ளிட்ட 57 பேருக்கு பத்ம விருதுகளும் வழங்கப்பட்டது.

விழாவில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்துகொண்டனர்