தமிழக அரசின் சமூக நலத் துறை மற்றும் சத்துணவுத் துறையில் காலியாகவுள்ள உதவி இயக்குநர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு திட்ட அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம். இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள பெண்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: உதவி இயக்குநர் (Assistant Director)

காலியிடங்கள் : 13

சம்பளம் : மாதம் ரூ.56,100 – 1,77,500

பணி: குழந்தைகள் மேம்பாட்டு திட்ட அதிகாரி (Child Development Officer)

காலியிடங்கள் : 87+2

சம்பளம் : மாதம் ரூ.36,900- 1,16,600

வயது வரம்பு: 01.07.2019 தேதியின்படி கணக்கிடப்படும்.

கல்வித்தகுதி: மனையியல் அறிவியல்(ஹோம் சயின்ஸ்), உளவியல், சமூகவியல், குழந்தை மேம்பாடு, உணவு மற்றும் ஊட்டச்சத்து, சமூக பணி அல்லது மறுவாழ்வு அறிவியல் போன்ற துறைகளில் ஏதாவது ஒன்றில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு

எழுத்துத்தேர்வு நடைபெறும் நாள்: 16.09.2019 & 17.09.2019

தேர்வுக்கட்டணம்: ஒருமுறை பதிவுக் கட்டணம் ரூ.150, தேர்வு கட்டணம் ரூ.200 .

தேர்வு மையம்: சென்னை, கோயம்புத்தூர், திருநெல்வேலி, சேலம், திருச்சிராப்பள்ளி.

விண்ணப்பிக்கும் முறை: http://www.tnpsc.gov.in, http://www.tnpsc.exams.net, http://www.tnpsc.exam.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 11.09.2019

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளலாம்.

ஆல் தி பெஸ்ட்