அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த சாகுத் அலியை (வயது 68) காவி தீவிரவாதிகள் மாட்டுக்கறி வைத்திருந்ததாக கூறி அடித்து நடுரோட்டில் முட்டிப்போட வைத்திருக்கின்றனர்.

பிஷ்வந்த் சாரிலிஃபர் என்ற மாட்டுக்கறி விற்பனை செய்யும் இடத்தில் புகுந்த சிலர் இச்செயலில் ஈடுபட்டுள்ளனர். மேலும் மாட்டுக்கறி விற்றதற்காக அந்த ஏழை முஸ்லீமை பன்றி கறியை வாயில் திணித்து சாப்பிட சொல்லியிருக்கிறார்கள்.

ஒரு கும்பல் சூழ்ந்து கொண்டு அவரை மிரட்டும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

“ஒட்டுமொத்தமாக மாட்டுக்கறி ஏற்றுமதி செய்யும் கம்பனிகளிடமிருந்து நன்கொடை வாங்கும் மோடியையோ, பாஜக அரசையோ  இந்த இந்து தீவிரவாத கும்பல் இதுவரை என்ன செய்திருக்கிறது. எதுவும் செய்ய மாட்டார்கள்.” என்று பலர் ஆவேசமாக இந்தச் செயலை கண்டித்து பதிவிட்டு வருகின்றனர்.