உறியடி பாகம் 2இன் டீசர் வெளியாகி சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது. விஜயகுமார் நடித்து இயக்கியிருக்கு இப்படம் கோடை விடுமுறையாக மே மாதத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே உறியடி பாகம் 1 வெளியாகி இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. சாதியைவைத்து அரசியல் செய்யும் அரசியல்வாதிகள் மையபடுத்தி உருவான அப்படம் பரவலாக கவனம் பெற்றையொட்டி அதன் இரண்டாம் பாகம் நடிகர் சூர்யாவின் தயாரிப்பில் தற்போது உருவாகியுள்ளது.

இப்படமும் முழுக்க முழுக்க இளைஞர்கள், அரசியலில் நுழைவது பற்றியும் கேடுகெட்ட அரசியல்வாதிகளால் சமூகத்தில் என்ன என்ன கொடுமைகள் நடக்கின்றன என்பதை பற்றியும் எடுக்கப்பட்டுள்ளது. டீசரில்  “அரசியல்ல நாம தலையிடனும், இல்லன்னா அரசியல் நம்ம வாழ்க்கைல தலையிடும்” என்ற வசனம் இடம்பெற்றுகிறது. மேலும் கோவிந்த் வசந்தா இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். என். பிரவீன்குமார் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.