இந்த வார வெளியீட்டில் எதிர்பார்ப்புக்குரிய திரைப்படமாக உள்ள ‘உறியடி 2’ திரைப்படத்துக்கு முதல் பாராட்டு இதன் தயாரிப்பாளர் சூர்யாவிடம் கிடைத்திருக்கிறது.

2016-ஆம் ஆண்டு வெளியான ‘உறியடி’ சாதி அரசியலை க்ரைம் த்ரில்லர் பாணியில் பேசியதில் பெரும் வரவேற்பை பெற்றது.

தற்போது சூர்யாவின் 2டி எண்டெர்டைன்மெண்ட் தயாரித்துள்ள ‘உறியடி 2’ திரைப்படத்தை விஜய் குமார் இயக்கியுள்ளார். இந்த படமும் அரசியலை மையப்படுத்தி உருவாக்கப்பட்டிருக்கிறது.

வரும் வெள்ளிக்கிழமை வெளியாகும் ‘உறியடி 2’ திரைப்படத்தின் இறுதி வடிவத்தை பார்த்த தயாரிப்பாளர் சூர்யா முழு நிறைவுடன் படக்குழுவினரை பாராட்டியுள்ளதாக பேட்டி ஒன்றில் இயக்குநர் விஜய் குமார் தெரிவித்துள்ளார்.