மணிரத்னம் இயக்கவுள்ள மிகப்பெரிய வரலாற்று திரைப்படமான ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் சத்யராஜ் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம்குறித்து கடைசியாக வந்த தகவலில் அருள்மொழி வர்மனாக ஜெயம் ரவி, ஆதித்ய கரிகாலனாக விக்ரம், சுந்தர சோழராக அமிதாப் பச்சன், வல்லவராயன் வந்தியத்தேவனாகக் கார்த்தி, பெரிய பழுவேட்டரையராகத் தெலுங்கு நடிகர் மோகன் பாபு, நந்தினியாக ஐஸ்வர்யா ராய், குந்தவை நாச்சியாராகக் கீர்த்தி சுரேஷ், பூங்குழலியாக நயன்தாரா ஆகியோர் நடிக்கின்றனர் எனக் கூறப்பட்டது.

இப்போது, தெலுங்கு நடிகர் மோகன் பாபு நடிக்கவிருந்த பெரிய பழுவேட்டரையர் கதாபாத்திரத்தில் அவருக்கு பதிலாகச் சத்யராஜ் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாமெனச் சொல்லப்படுகிறது.

சமீப காலமாகக் குணச்சித்திர வேடங்களில் முத்திரைப்பதித்து வரும் சத்யராஜ், பாகுபலி படங்களில் கட்டப்பா பாத்திரத்தைச் சிறப்பாக வெளிகொண்டுவந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.