இந்தியா – நியூசிலாந்து இடையேயான அரையிறுதிப் போட்டி இன்று மதியம் 3 மணிக்கு மீண்டும் அதே மைதானத்தில் தொடங்க உள்ளது.

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் அரையிறுதிப் போட்டி நேற்று மான்செஸ்டர் மைதானத்தில் இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கிடையே நடந்தது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. நியூசிலாந்தின் அணி சார்பில் கப்டில் 1, ஹெண்ட்ரி நிகோலஸ் 28, வில்லியம்சன் 67, நீசம் 12, கிராந்தோமெ 16 ரன்னில் விக்கெட்டை இழந்தனர். டெய்லர் 67*, லாதம் 3 ரன்களுடன் களத்தில் உள்ளனர். 46.1ஓவர்களில் 211 ரன்கள் எடுத்திருந்தது நியூசிலாந்து அணி ஆட்டத்தை மழை காரணமாக போட்டி நிறுத்தப்பட்டது. தொடர்ந்து 3 மணி நேரம் கனமழை கொட்டியதால் போட்டி நிறுத்தப்பட்டு, இன்று மீண்டும் 3 மணிக்கு (உள்ளூர் நேரப்படி 10.30) மணிக்கு தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மான்செஸ்டர் நகரில் இன்று முழுவதும் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும் காலை 7 – 8 மணி வரை மழை பெய்யும் என்றும் அதன் பின்னர் மழை நின்றுவிடும் என்றும், ஆனால் மீண்டும் மதியம் 2-3 மணி வரை மழை பெய்ய அதிக வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை இன்றும் மழை தொடர்ச்சியாக பெய்து போட்டி நடத்த முடியாத சூழல் உருவாகினால், லீக் தொடரில் மிக அதிக வெற்றி மற்றும் புள்ளிகளைப் பெற்ற இந்தியா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும்.

இருந்தும் நியூசிலாந்து அணி எஞ்சியுள்ள 3.5 ஓவர்கள் பேட்டிங் செய்து பின் இந்திய அணிக்கு இலக்கு நிர்ணயிக்கப்படும். நிர்ணயிக்கப்படும் இலக்கை இந்திய அணி எட்டும்போது மழைகுறுக்கிட்டால் என்னமாதிரியான விதிமுறைகள் கடைபிடிக்கப்படும் என்று பொருத்திருந்துதான் பார்க்கவேண்டும்.