‘மனை உறை புறவின் செங் காற் பேடைக்
காமர் துணையொடு சேவல் சேர,
புலம்பின்று எழுதரு புன்கண் மாலைத்
தனியே இருத்தல் ஆற்றேன்’ என்று, நின்
பனி வார் உண்கண் பைதல கலுழ, 5
‘நும்மொடு வருவல்’ என்றி; எம்மொடு-
பெரும் பெயர்த் தந்தை நீடு புகழ் நெடு நகர்
யாயொடு நனி மிக மடவை!- முனாஅது
வேனில் இற்றித் தோயா நெடு வீழ்,
வழி நார் ஊசலின், கோடை தூக்குதொறும், 10
துஞ்சு பிடி வருடும் அத்தம்
வல்லை ஆகுதல் ஒல்லுமோ, நினக்கே?

ஒரு பாலைவனம்.

அந்தப் பாலைவனத்தில் ஒரு பெரிய இத்திமரம் இருக்கு.

அந்த இத்தி மரத்தில் விழுதுகள் ஏராளம் தொங்கிக் கொண்டிருக்கின்றன. அந்த விழுதுகள் தரையைத் தொடாமல் தொங்கிக் கொண்டிருக்கின்றன.

ஒரு விடியக்கால நேரம்.

மேல்காற்று வீசிக்கொண்டிருக்கிறது.

மேல் காற்றுக்கு அந்த விழுதுகள் ஊஞ்சல் மாதிரி ஆடிக்கொண்டிருக்கிறது.

அந்தப் பெரிய இத்திமரத்தின் அடியில் ஒரு பெண் யானை படுத்து உறங்கிக் கொண்டிருக்கிறது. அந்தப் பெரிய இத்திமரத்தின் விழுதுகள் அந்தப் பெண் யானையைத் தாலாட்டித் தாலாட்டி உறங்க வைத்துக் கொண்டிருக்கிறது.

நெய்தல் தத்தனார்
நற்றிணை 162