சமீபத்தில் வெளியான ‘தேவ்’ எதிர்பார்க்கப்பட்ட அளவுக்கு வரவேற்பை பெற்றதா என்கிற கேள்வி ஒருபுறம் இருந்தாலும், தனது அடுத்தகட்ட பணிகளில் தொய்வின்றி ஈடுபட தொடங்கிவிட்டார் கார்த்தி. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகிவரும் கார்த்தியின் ‘கைதி’ படப்பிடிப்பு நிறைவடைந்திருப்பதே அதற்கு சான்று.

‘கைதி’ படத்தை முடித்த கையோடு கார்த்தி தொடங்கும் அடுத்த படத்தை இயக்குபவர் பாக்யராஜ் கண்ணன். இவர் சிவகார்த்திகேயன் நடித்த ரெமோவை இயக்கியவர் ஆவார்.

ரஷ்மிகா மந்தனா நாயகியாக நடிக்கும் இப்படத்தில் மற்றொரு முக்கியமான நடிகர் தற்போது இணைந்திருக்கிறார். ‘கே.ஜி.எஃ ப்’ திரைப்படத்தில் மிரட்டிய கருடா ராம் இப்படத்தின் வில்லன் வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இன்னும் பெயரிடப்படாத கார்த்தியின் இந்த புதிய படத்தில் பல்வேறு முக்கிய தொழிற்நுட்ப கலைஞர்கள் பணியாற்றுகின்றனர். ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.