‘மதயானை கூட்டம்’ படத்தை இயக்கிய விக்ரம் சுகுமாரன் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இயக்கப்போகும் படத்தில் சாந்தனு பாக்யராஜ் நடிக்கவுள்ளார்.
2013-ஆம் ஆண்டு வெளியான ‘மதயானை கூட்டம்’ திரைப்படத்தில் கதிர், ஓவியா, வேல ராமமூர்த்தி உள்ளிட்டவர்கள் நடித்திருந்தனர்.
பெரிய அளவில் பேசப்பட்ட இப்படத்தை ஜி.வி. பிரகாஷ் தயாரித்தார். விமர்சன தளத்தில் இப்படம் பரவலாக விவாதத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில், பல ஆண்டுகளுக்கு பின்னர் தனது அடுத்த படத்தை தொடங்குகிறார் விக்ரம் சுகுமாரன். முதற்கட்ட தகவலில் சாந்தனு பாக்யராஜ் இதன் பிரதான பாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.