மக்களவை தேர்தல் களத்தில் தீவிரமாக பிரச்சாரம் செய்துவரும் உதயநிதி ஸ்டாலின், தமிழக அரசு மற்றும் பாஜகவின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்து வருகிறார்.

உதயநிதியின் பிரச்சார தாக்குதலில் சிக்கிய அரசியல் பிரபலங்கள், தங்களுடைய பிரச்சார நிகழ்ச்சியில் அவருக்கு பதிலளிக்க முயற்சித்துக்கொண்டிருக்கின்றனர்.

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் நாகை மக்களவை தொகுதியில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் எம்.செல்வராஜை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டபோது உதயநிதி ஸ்டாலின் அனல்பறக்க பேசினார். அப்போது, அங்கு குழுமியிருந்த மக்களும் உதயநிதியிடம் கேள்விகளை முன்வைத்தனர்.

ஆட்சி அதிகாரத்தின்போது விவசாயிகளைக் கண்டுகொள்ளாத மோடி இப்போது திடீரென விவசாயிகளுக்காக கவலைப்படுவதுபோல் காட்டிக்கொள்கிறார் என விமர்சனம் செய்த உதயநிதி ஸ்டாலின் திருவாரூர், நாகை மாவட்ட விவசாயிகளை மையப்படுத்தி உரையாற்றினார்.