முன்னணி இயக்குநர் ஹரி சமீபத்தில் நடிகர் ஜெயம் ரவியை சந்தித்தது, இருவரும் சேர்ந்த படம் பண்ணுவதற்காகத்தான் என கூறப்படுகிறது.
கோமாளி, இயக்குநர் அஹமத் இயக்கும் படம் என வரிசையாக கமிட் ஆகியுள்ளார் ஜெயம் ரவி. இதனோடு மணிரத்னத்தின் கனவு படமான பொன்னியின் செல்வன் படத்தில் ஜெயம் ரவிக்கு முக்கிய இடம் இருக்கிறது.
சாமி 2 படத்துக்குப் பிறகு ஹரி இன்னும் அடுத்தப் படத்தை தொடங்கவில்லை. இப்படியான சூழலில் ஜெயம் ரவியை அவர் சந்தித்திருக்கிறார்.
இரண்டு பிரபலங்களின் இந்தச் சந்திப்பு அடுத்து ஒரு முழுமையான கமர்ஷியல் படத்தை ரசிக்கும்படி வழங்குமென பரவலாக பேசப்படுகிறது. விரைவில் ஜெயம் ரவி – ஹரி இணைவது பற்றி தகவல் வெளியாகலாம்.