‘காதல் கொண்டேன்’ திரைப்படத்தின் சில பாடல் காட்சிகளைப் பார்த்துவிட்டு, உங்களது இயக்கத்தில் நடிக்க வேண்டுமென கடந்த 2002-ஆம் ஆண்டு செல்வராகவனிடம் கூறியிருந்தேன், அந்த ஆசை 2019-ல்தான் நிறைவேறியிருக்கிறது என சூர்யா தெரிவித்துள்ளார்.
‘என்.ஜி.கே’ திரைப்படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் சூர்யா, செல்வராகவன், யுவன் ஷங்கர் ராஜா, சாய் பல்லவி உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துக்கொண்டனர்.
இதில் உரையாற்றியபோதுதான் மேற்கண்டவாறு சூர்யா கூறினார். ‘என்.ஜி.கே’-வுக்கு பிறகு மீண்டும் செல்வராகவன் இயக்கத்தில் நடிக்க வேண்டும். இது வெறும் அரசியல் பொழுதுபோக்கு படம் மட்டுமல்ல. செல்வாவின் உணர்வுகள், அழகியல் போன்றவையும் இப்படத்தில் உள்ளன என்று சூர்யா கூறினார்.