அமேசான் காடுகளில் வரலாறு காணாத தீ – சர்வதேச பிரச்சினையாகக் கருதப் பிரேசில் அரசு கோரிக்கை.

உலகின் மழை உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கும் அமேசான் காடு, பூமிக்குத் தேவையான ஆக்ஸிஜனில் 20 விழுக்காட்டைப் பூர்த்தி செய்கிறது என்றும் இது சர்வதேச பிரச்சினையாகக் கருதி ஜி-7 உச்சி மாநாட்டில் விவாதிக்க வேண்டும் என்று அதிபர் வலியுறுத்தியுள்ளார்.

ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல் பிரேசிலின் அமேசான் காடுகளில் 9,500 இடங்களில் காட்டுத் தீ ஏற்பட்டுத் தீக்கிரையாகி வருகின்றன. கடந்த ஆண்டு 40,000 முறை வனத்தீ ஏற்பட்ட நிலையில், தற்போது 8 மாத காலத்தில் மட்டுமே 74,000 முறை காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. முந்தைய காலங்களைவிடக் கடந்த ஜூன் மாதத்தில் மட்டும் 88 விழுக்காடு வரை அமேசான் காடுகள் அழிக்கப்பட்டதாகப் பிரேசில் நாட்டின் விண்வெளி ஆராய்ச்சி மையம் கூறியுள்ளது.

உலகின் கார்பன்டை ஆக்சைடை கட்டுக்குள் வைத்திருப்பதில் அமேசான் காடுகளின் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்தது எனக் கருதப்படும் நிலையில், புவியின் நுரையீரல் எரிந்து வருகிறது என இயற்கை ஆர்வலர்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர். பிரேசிலின் சா பாலோ நகரிலிருந்து 2,000 கிலோ மீட்டர் தொலைவில் வனத் தீ பரவி வருகிறது. அமேசான் காடுகளில் ஏற்பட்டுள்ள தீயின் காரணமாக, பிரேசிலின் சாவ் பாலோ நகரமே கரும்புகையால் சூழப்பட்டுள்ளது. இதற்கிடையே, அமேசான் காட்டுத் தீயால் அரிய வகை உயிரினங்கள் உயிரிழந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. காட்டுத் தீக்கு என்.ஜி.ஓக்கள்தான் காரணம் என்று பிரேசில் அதிபர் ஜெய்ர் போல் சொனாரோ குற்றம்சாட்டியுள்ளார்.

உலகின் மழை உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கும் அமேசான் காடு, பூமிக்குத் தேவையான ஆக்ஸிஜனில் 20 விழுக்காட்டைப் பூர்த்தி செய்கிறது என்றும் இது சர்வதேச பிரச்சினையாகக் கருதி ஜி-7 உச்சி மாநாட்டில் விவாதிக்க வேண்டும் என்று அதிபர் வலியுறுத்தியுள்ளார்.