சபாநாயகர் தனபால் அனுப்பிய நோட்டீஸுக்கு தடைகோரி கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபு இன்று (மே 8) உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

சபாநாயகர் தனபால் அனுப்பிய நோட்டீஸுக்கு தடைவிதிக்கக் கோரி ஏற்கெனவே, அதிமுக எம்எல்ஏக்கள் ரத்தினசபாபதி, கலைச்செல்வன் ஆகியோர் தொடர்ந்த வழக்கில் சபாநாயகரின் நோட்டீஸுக்கு இடைக்காலத் தடை விதித்தது உத்தரவிட்டுள்ளது உச்ச நீதிமன்றம்.

சபாநாயகர் அனுப்பிய நோட்டீஸுக்கான கால அவகாசம் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபுக்கும் பொருந்தும் என்பதால் இது தொடர்பாக அவர் பதிலளிக்கத் தேவையில்லை எனச் சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் நேற்று தெரிவித்தார்.

இந்நிலையில், கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபுவும் சபாநாயகர் தனபால் அனுப்பிய நோட்டீஸுக்கு தடை விதிக்க வேண்டும் என்று இன்று (மே 8) உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.