யாரினும் இனியன் பேரன் பினனே
உள்ளூர்க் குரீஇத் துள்ளுநடைச் சேவல்
சூன்முதிர் பேடைக் கீனி லிழைஇயர்
தேம்பொதிக் கொண்ட தீங்கழைக் கரும்பின்
நாறா வெண்பூக் கொழுதும் 5
யாண ரூரன் பாணன் வாயே.

ஒரு ஊர்க்குருவி.

அது ஒரு ஆண்.

அந்த ஆண் குருவி ஒரு கரும்பின் மேல் உட்கார்ந்திருக்கிறது.

அந்த ஆண் குருவியின் மனைவி கர்ப்பமாக இருக்கிறது.

மனைவி முட்டையிடுவதற்கு ஒரு நல்ல கூடு வேண்டும். அந்தக் கூடு மெத்துமெத்தென்று மென்மையாக இருக்க வேண்டும்.

இந்த ஆண்குருவி தன் மனைவிக்கு மிருதுவான ஒரு கூடு கட்டுவதற்காக அந்தக் கரும்பின் பூவை தன் அலகால் கொத்தி எடுத்துக்கொண்டிருக்கிறது.

-வடம வண்ணக்கள் தாமோதரனார்
குறுந்தொகை 85