காமங் காமம் என்ப காமம்
அணங்கும் பிணியும் அன்றே நுணங்கிக்
கடுத்தலுந் தணிதலும் இன்றே யானை
குளகுமென் றாள்மதம் போலப்
பாணியும் உடைத்தது காணுநர்ப் பெறினே. 5

ஒருநாள் கடவுள் எனக்கு உரிய என்னவளை அடையாளம் காட்டினார். நான் அவளைச் சந்தித்தேன். அவள் எனக்கு உரிமைப்பட்டவள். ஆகையால் அவளைப் பார்த்ததும் என் காமம் மலர்ந்தது.

நாங்கள் காதலித்தோம்.

நாங்கள் திருமணம் செய்துகொண்டோம்.

காமம் எங்களைச் சேர்த்து வைத்தது.

காமம் உள்நோயும் இல்லை.

காமம் தொற்று நோயும் இல்லை.

மக்கள் சொல்வதைப் போல் காமம் இழிவானதும் இல்லை.

கடவுள் எங்களைச் சந்திக்க வைத்தார்.

காமம் எங்களைச் சேர்த்து வைத்தது.

-மிளைப்பெருங் கந்தனார்
குறுந்தொகை 136