அல்கு படர் உழந்த அரி மதர் மழைக்கண்,
பல் பூம் பகைத் தழை நுடங்கும் அல்குல்,
திரு மணி புரையும் மேனி மடவோள்
யார் மகள்கொல்? இவள் தந்தை வாழியர்!
துயரம் உறீஇயினள் எம்மே: அகல்வயல் 5
அரிவனர் அரிந்தும் தருவனர்ப் பெற்றும்
தண் சேறு தாஅய், மதனுடை நோன் தாள்
கண் போல் நெய்தல் போர்வில் பூக்கும்
திண் தேர்ப் பொறையன் தொண்டி
தன் திறம் பெறுக, இவள் ஈன்ற தாயே! 10

ஒரு பெரிய வயலில் அறுவடை நடந்து கொண்டிருக்கிறது.

ஒரு பெரிய வயலில் நெல் அறுவடையின்போது ஒரு அல்லி மொட்டு அறுபட்டு நெல்லுக்கெட்டோடு சேர்ந்து அது களத்துமேட்டுக்கு வந்திருக்கிறது.

அந்தக் களத்து மேட்டில் ஒரு நெல் சூடு இருக்கு. அந்தப் பெரிய நெல் சூட்டில் அந்த அல்லி மொட்டு அழகாகப் பூத்திருக்கிறது.

கண்ணகனார்
நற்றிணை 8