ஆப்கானிஸ்தான் பேட்ஸ்மேன் மற்றும் விக்கெட் கீப்பரான முகமது ஷஷாத் கண்ணீருடன் வெளியிட்ட காணொளி பெரும் வைரலாகி கொண்டிருக்கிறது.
உலகக் கோப்பை கிரிக்கெட் இங்கிலாந்து நாட்டில் உற்சாகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுடன் நடந்த போட்டிகளில் ஆப்கானிஸ்தான் வீரர்  முகமது ஷஷாத் 0 மற்றும் 7 ஓட்டங்களில் அவர் ஆட்டமிழந்தார். அதன் பிறகு அவர் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக நாடு திரும்புவதாக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்திருந்தது.
இது குறித்து அந்நாட்டு ஊடகம் ஒன்றிற்கு ஷஷாத் ஒரு காணொளியை அனுப்பியிருந்தார், அதில் கண்ணீருடன் “எனக்கு எந்தக் காயமும் ஏற்படவில்லை. நான் விளையாடுவதற்கு முழுத்தகுதியுடன் இருக்கிறேன். ஆனால் என்னிடம் எதுவுமே கேட்காமல் கட்டாயப்படுத்தி என்னை நாட்டுக்குத் திரும்பக் கூறியுள்ளனர்” எனக் கூறியுள்ளார். இந்த சம்பவம் கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.