சென்னை குடும்ப நல நீதிமன்ற அறையில் நீதிபதி கலைவாணன் கண்முன்பே மனைவி வரலெட்சுமியை கத்தியால் குத்தியுள்ளார் கணவர் சரவணன். வரலெட்சுமி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், கணவன் சரவணனை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ளது குடும்பல நல நீதிமன்றம். இங்கு கணவன், மனைவி விவாகரத்து தொடர்பான நிறைய வழக்குகள் தினந்தோறும் நடைபெற்றுவருகிறது. நீதிமன்றத்தில் எராளமான போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.

இந்நிலையில், விவாகரத்து வழக்குக்காக இன்று (மார்ச் 19) நீதிமன்றத்திற்கு வந்துள்ளனர் சரவணன்- வரலெட்சுமி தம்பிதியினர். நீதிபதி கலைவாணன் அமர்வு முன்பு இருவரும் நேரில் ஆஜராகினர். அப்போது, யாரும் எதிர்பார்க்காத வகையில்தான் மறைத்துவைத்திருந்த கத்தியைக்கொண்டு மனைவி வரலெட்சுமியை குத்தினார் சரவணன்.

இந்தக் கொலை முயற்ச்சி தாக்குல் நீதிபதியின் கண்முன்பே நடந்துள்ளது,  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. படுகாயம் அடைந்த வரலெட்சுமி ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார். இதற்கிடையில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் சரவணனை கைது செய்தனர். காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்பத்தூரை சேர்ந்தவர் சரவணன். இவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.