இலங்கையில் நேற்று நிகழ்த்தப்பட்ட கொடூர குண்டுவெடிப்பு சம்பவத்தில் நூலிழையில் உயிர்தப்பியதாக நடிகை ராதிகா சரத்குமார் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் 8 இடங்களில் நேற்று நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதல்களில் இதுவரை 290 பேர் உயிரிழந்துள்ளனர் மேலும் 500 பேர் காயமடைந்துள்ளனர்.

கொழும்பு நகரில் குண்டுவெடிப்பு நடைபெற்ற அதே விடுதியிலிருந்து உயிர் தப்பிய அனுபவத்தை நடிகை ராதிகா சரத்குமார் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

”கொழும்பில் குண்டுவெடிப்பு என்ற தகவலை கேட்டு அதிர்ந்துபோனேன். இப்போதுதான் குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்ட சின்னமொன் கிராண்ட் ஹோட்டலில் இருந்து வெளியேறினேன்” என ராதிகா சரத்குமார் கூறியுள்ளார்.