‘சண்டக்கோழி 2’ படத்தை தொடர்ந்து விஷால் நடித்திருக்கும் ‘அயோக்யா’ திரைப்படம் இம்மாதம் (ஏப்ரல் 19) வெளியாகுமென அறிவிக்கப்பட்டிருக்கிறது. விஷாலுடன் பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கும் ‘அயோக்யா’ தெலுங்கில் பெரும் வரவேற்பை பெற்ற ‘டெம்பர்’ திரைப்படத்தின் ரீமேக் ஆகும்.

இதற்கடுத்து விஷாலின் பட்டியலில் இருக்கும் புதிய திரைப்படத்தை சுந்தர்.சி இயக்கி வருகிறார். விஷாலுடன் தமன்னா ஜோடி சேர்ந்திருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு வெளிநாடுகளிலும் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

முன்னதாக துருக்கியில் நடைபெற்ற சண்டைக் காட்சிக்கான படப்பிடிப்பில் விஷால் காயமடைந்த செய்தி அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தற்போது அடுத்தகட்ட படப்பிடிப்பும் மற்றொரு வெளிநாட்டில் இன்று (ஏப்ரல் 1) தொடங்குவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஐரோப்பிய நாடான அஸர்பைஜினில் நடைபெறும் இந்த படப்பிப்பில் முக்கிய காட்சிகள் படமாக்கப்படவுள்ளன. விஷாலின் இந்த புதிய திரைப்படத்துக்காக தமிழ் சினிமாவில் இதுவரை காண்பிக்கப்படாத நாடுகளில் படப்பிடிப்பு நடைபெறுவது கவனம் பெற்றிருக்கிறது.